By: உரையாசிரியர் : களத்தூர் வேதகிரி முதலியார்
திருக்குறள் மூலமும்
உரையும்
விளக்க உரையாசிரியர்:
களத்தூர் வேதகிரி முதலியார்
பதிப்பாசிரியர்: சிவாலயம்
ஜெ. மோகன்
திருக்குறள் ஓர் அருளிச்
செயல். மனித குலத்திற்கு வழிகாட்டுகின்ற எளிய நிலையில் உதவும் அறத்தை போதிக்கும்
அறநூல் திருக்குறள். அறம், பொருள், இன்பம் என்ற நிலைகளின் வழியே வீடுபேற்றுக்கும்
வழிகாட்டுகின்ற மதுரைக் கல்விச் சங்கத்துத் தமிழ் தலைமைப் புலமை நடாத்திய களத்தூர்
வேதகிரி முதலியாரால் பதவுரை, கருத்துரை, விசேட உரை செய்து பல இலக்கண மேற்கோள்களுடன் இந்நூல்
கருத்துச் செறிவோடும் ஆழமான நுண்மான் நுழை புலமையுடன் இயற்றப்பட்டுள்ளது.
முதன்முதலில் 2015-ல் வடிவேலு செட்டியாரின்
அரிய உரை சிவாலயம் மூலம் வெளிவந்தது. 2016-ல் திருவாசக மணியின்
திருக்குறள் ஆங்கிலப்பெயர்ப்பும் விளக்கமும் வெளிவந்தது. மூன்றாவதாக குப்புசாமி
முதலியார் அவர்களின் உரை 2017-ல் வெளிவந்தது 2018-ல் பெரிய புராணத்திற்கு சூளை சுப்பராய நாயக்கர் செய்த
பேருரை மூன்று தொகுதிகளாக வெளி வந்தது. தொடர்ந்து இதே ஆண்டு களத்தூர் வேதகிரி
முதலியார் அவர்களின் நூலை சிவாலயம் வெளியிட்டது.
By: தணிகைமணி வ.சு. செங்கல்வராய பிள்ளை
By: உரையாசிரியர்: கிருஷ்ணாம்பேட்டை கி.குப்புசாமி முதலியார்
By: உரையாசிரியர்: கோ.வடிவேலு செட்டியார்
By: உரையாசிரியர்: பேராசிரியர் மா.வயித்தியலிங்கன்